புதுச்சேரியில், முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 87 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது, 388 பேர் மருத்துவமனையில் சிகிச்சர் பெற்று வருகின்றனர். 221 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த ஊழியருடன் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.