tamilnadu

img

டெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வசூலிக்கும் இயக்கம்

குடியுரிமை திருத்தசட்டத்தை திரும்ப பெறக்கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வசூலிக்கும் இயக்கம் புதுச்சேரி முழுவதும் சனிக்கிழமை (மார்ச் 14) நடைபெற்றது. நெல்லிதோப்பு மார்க்கெட்டில் நடைபெற்ற இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகநயினார் கலந்துகொண்டு நிதி வசூல் இயக்கத்தை துவக்கி  வைத்தார். கட்சியின்   மத்தியகுழு உறுப்பினர் சுதா சுந்தரராமன்,  பிரதேச செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், பிரபுராஜ், நகர கமிட்டி செயலாளர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.