இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 100 வது ஆண்டு துவக்கத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி கிளை அலுவலகம் முதல் அனைத்து அலுவலகங்களிலும் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. ரெட்டியார் பாளையம் அஜிஸ்நகரில் அமைந்துள்ள கட்சியின் பிரதேசக்குழு அலுவலகத்தில் மூத்த தலைவர் தா.முருகன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் நிலவழகன், பிரதேசக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, அலுவலகச் செயலாளர் ஜோதிபாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.