அறந்தாங்கி: அறந்தாங்கி அண்ணா நகர் மக்களுக்கு ரோட்டரி கிளப், லெட்சுமி பிளைவுட்ஸ் அண்ட் கிளாஸ் உரிமையாளர் செந்தில்குமார் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் தலைவர் தங்கதுரை தலைமை தாங்கினார். கிளப் உறுப்பினர் லெட்சுமி பிளைவுட்ஸ் அண்ட் கிளாஸ் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் அறந்தாங்கி தாசில்தார் சிவக்குமார், 200 பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினார். ரோட்டரி உறுப்பினர்கள் புவனா செந்தில்குமார், உலகநாதன், தியாகராஜன், செந்தில்வேலன் கலந்து கொண்டனர்.