புதுக்கோட்டை, ஆக.29- ரேசன் கடைகளில் நடக்கும் முறைகேடு களை தடுத்து நிறுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோ ட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலி பர் சங்க கறம்பக்குடி ஒன்றியத் தலைவர் ஏ.லாசர் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் துரை.நாராயணன் சிறப்புரையாற்றி னார். ரேசன் கடைகளில் நடக்கும் முறைகே டுகளை தடுத்து நிறுத்த வேண்டும். கொரோ னா நிவாரண பொருட்கள் முறையாக மக்களை சென்றடைய வழிவகை செய்ய வேண்டும். புதுவளசல் கிராமத்தில் புதியாக ரேசன் கடை அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன.