tamilnadu

img

தனியார் விளம்பரப் பலகையில் கசிந்த மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே பிரபல தனியார் நிறுவனம் சார்பில் விளம்பரப் பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. விளம்பரப் பலகை இரும்பு குழாய் மூலம் நடப்பட்டிருக்கிறது. மூன்று நாட்கள் பெய்த மழையின் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு இரும்பு குழாய் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை அறியாத கூலித் தொழிலாளி கருப்பையா அப்பகுதியில் சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தனியார் நிறுவனம் சார்பில் அலட்சியமாக வைக்கப்பட்ட விளம்பர பலகையினால் தான் கருப்பையா உயிரிழந்தார் எனக் கூறி சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு 300க்கும் மேற்ப்பட்ட உறவினர்கள் மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அறந்தாங்கி நகர் பகுதி முழுவதும் இது போன்ற பாதுகாப்பு இல்லாத விளம்பர பலகைகள் தனியார் நிறுவனங்களால்  வைக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். பாதுகாப்பில்லாத விளம்பர பலகையின் இரும்பு குழாயை பிடித்து உயிரிழந்த கருப்பையா குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தனியார் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.