புதுக்கோட்டை, செப்.3- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊய்வூதியர் சங்கத் தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக்கூட்டம் செவ் வாய்க்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் எம்.முத்தையா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வரிககள்; பி. ஆழ்வாரப்பன், என்.ராமச்சந்திரன், ஆர்.ராஜேந்திரசிங், ஆர்.சுப்பிரமணியன், எம்.வெள்ளைச்சாமி, கே.சதா சிவம், ஆர்.முருகேசன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தற்பொழுது 15 நாட்களுக்கு ஒருமுறை அரசு மருத்துவ மனைகளில் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பெரும் பாலும் வயதானவர்களே மேற்கண்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு 30 நாட்களுக்கு ஒருமுறை சேர்த்து மாத்திரைகள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.