புதுக்கோட்டை, ஜூலை 16- மாணவர்கள் தங்களின் பாடத்திட்டத்தோடு பொது அறிவை வளர்க்கும் கல்வியிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கிளை நூலக வாசிப்பு இயக்கத்தின் சார்பில் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜன் பிறந்த தின விழாவும், வாசிப்பு விழிப்புணர்வு விழாவும் திங்கள்கிழமை நடை பெற்றது. விழாவில் கலந்துகொண்டு தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்துநிலவன் பேசுகையில், கல்வி என்பது குறிப்பிட்ட காலத்தோடு நின்றுவிடுவது அல்ல. வாழ்க்கையில் புத்தக வாசிப்பு என்பது இறக்கும் வரைக்கும் இருக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கை யில் சாதனைகள் படைக்க வேண்டுமெனில் பாடப்புத்த கங்களைத் தாண்டி பொது அறிவை வளர்க்கும் வகையில் நூலகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றார். விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் க.சுரேஷ் தலைமை வகித்தார். முன்னதாக நூலகர் ஜெயராஜ் வர வேற்க, ஆசிரியர் பூங்குழலி நன்றி கூறினார். உதவித் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் நிகழ்ச்சிகளை ஒருங்கி ணைத்தார்.