புதுக்கோட்டை, ஜுலை 22- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக முத்தரசன் பணியாற்றி வருகிறார். முத்தர சன் குடும்பத்துடன் ஆலங்குடியில் வசித்து வரும் நிலை யில் இவரது மனைவி தமிழ்செல்விக்கும் அருகே வசிப்ப வர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படு கிறது. இதுகுறித்து முத்தரசன் ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்த நிலையில் அதனை ஏற்காத காவலர்கள் முத்தரசன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்கறிஞர் முத்தரசன் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையை கண்டித்து ஆலங்குடி மற்றும் புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்க ணித்து புதுக்கோட்டை மற்றும் ஆலங்குடி நீதிமன்ற வளா கத்திற்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.