பொன்னமராவதி, அக்.4- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலு வலர் பிரம்ம வித்யா நாயகி தலைமை வகித்தார். நூற்று க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் இதில் கலந்து கொண்ட னர். மருத்துவர்கள் செரின் பெனான்சிர், ராமராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குழந்தைகள் நலத்திட்ட ஒருங்கிணைப்பா ளர் அருண் நன்றி கூறினார்.