tamilnadu

img

தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஆக.1- மத்திய அரசின்  தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து புதுக்கோட்டையில் சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் வியாழக்கிழ மையன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுக்கோட்டை நல வாரிய அலுவலகம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கல்லு டைக்கும் மற்றும் கட்டுமானத் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் க.செல்வராஜ் தலைமை வகித்தார்.  கோரிக்கைகளை விளக்கி சிஐ டியு மாவட்டத் தலைவர் க.முகமதலி ஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொரு ளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், கிராம பஞ்சாத்து இணைப்புக்குழு மாநிலத் தலைவர் ப.சண்முகம், சிஐடிய மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.ஜியாவுதீன், மாவட்ட துணைத் தலைவர் க. சிவக்குமார், செ.பிச்சைமுத்து, ஆட்டோ சங்க செயலாளர் சீனி வாசன் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து தொழிலாளர் விதோரப் போக்கில் ஈடுபடும் புதுக்கோட்டை சமூக பாதுகாப்புத் திட்ட உதவி ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானத் தொழிலா ளர்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் மானியத்துடன் வீடு கட்டித் தர வேண்டும். மத்திய அரசின் தொழி லாளர் விரோத பென்சன் திட் டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப் பாட்டத்தின் போது வலியுறுத்தப் பட்டன.