tamilnadu

img

தேர்தல் நடத்தை விதியை அமுல்படுத்திய அதிகாரியை வசைபாடிவிட்டு சத்தமாய் மட்டுமே பேசியதாக நழுவியுள்ளார்

பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பக்சார் மாவட்ட துணை கோட்ட குற்றவியல் நடுவரை மதிக்காமல் வசைபாடிவிட்டு அதன் வீடியோ காட்சி வெளியானதால் சத்தமாய் பேசினேன் என தற்போது நழுவியுள்ளார்.


நேற்று பீகார் மாநிலத்தின் பக்சார் மாவட்டத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மாவட்ட துணைக்கோட்ட குற்றவியல் நடுவர் கே.கே. உபதயாய் அவர்கள் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிகமான வாகனங்கள் உபயோகப்படுத்தப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்த முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்திருந்த பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே அவருடன் அதிகார தோனியில் கோபத்துடன் வாக்குவாதம் செய்துள்ளார். இச்சம்பவம் வீடியோ காட்சியாக வெளியாகி பரவலாக சர்ச்சையை கிளப்பியது. மேலும், இதுதொடர்பாக அவர்மீது வழக்கு ஒன்றும் பதிவாகியுள்ளது.


சம்பவம் சர்ச்சையை கிளப்பியதால் தானாக முன் வந்த பா.ஜ.க அமைச்சர் நான் அவரிடம் கோபப்படவில்லை; சத்தமாக மட்டுமே பேசினேன்; எனது குரல் அவ்வாறானது என்று சம்பவத்திலிருந்து நழுவியுள்ளார்.

;