tamilnadu

img

பீகார்: 13 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து


பீகாரில் 13 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 


பீகாரின் சப்ரா நகரில் இருந்து சூரத் நோக்கி சென்ற தப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 9.45 மணியளவில் சாப்ரா நகரின் கவுதம் ஆஸ்தான் பகுதியில் சென்றபோது விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 4 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் மீட்பு குழுவினரும் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கடந்த பிப்ரவரியில் பீகாரின் சஹடாய் பஜர்க் பகுதியில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் 6 பயணிகள் பலியாகினர் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

;