tamilnadu

img

போக்குவரத்துத் தடை; மூலிகை தட்டுப்பாடு கபசுரக் குடிநீா் தயாரிக்க முடியாத நிலை


பழனியில் உள்ள சித்த வைத்தியசாலை மற்றும் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கபசுரக் குடிநீா் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரானோ வைரஸ் பரவல் காரணமாக தற்போது கபசுரக் குடிநீருக்கு  கிராக்கி ஏற்பட்டுள்ளது. பழனியில் உள்ள சித்த வைத்திய சாலைகள், ஆயுர்வேத மருந்துக் கடைகளில் இதன் விற்பனை தீவிரமடைந்துள்ளது. 

இதுகுறித்து சித்த மருத்துவா் ஒருவர் கூறுகையில், இந்த மருந்து பல்வேறு மூலிகைக் கலவைகளால் செய்யப்படுகிறது. நீண்ட காலமாகவே குறிப்பிட்ட நோய்களுக்கு இது பரிந்துரைக்கப்பட்டு வந்தது. மருந்து விற்றுத் தீரும் நிலையில் உள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மூலிகைகளை சேகரித்து இம் மருந்தை தயாறாக செய்ய முடியாத நிலை உள்ளது என்றாவா.