தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம்
தமிழ்த்திரை உலகில் மாபெ ரும் சகாப்தமாக விளங்கிய பழம்பெரும் கதாநாயகனும், சிறந்த பாடகரும், ரசிகர் பெரு மக்களால் எம்.கே.டி. எனவும் அன்புடன் அழைக்கப்படுபவர் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர். அவரது கலையுலக வாழ்வு 1934 ஆம் ஆண்டு பவளக் கொடி திரைப்படத்தின் மூலம் அரங்கேறியது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சியவர். அவரது பன்முக பங்களிப்பையும், சாத னையையும் அங்கீகரிக்கும் வகையிலும் திருச்சி மாவட் டத்தில் ரூ. 50 லட்சம் செலவில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கும் என்று முதலமைச்சர் அறி வித்தார்.
‘தமிழ்நாடு நாள்’
தனித்துவ தமிழ்நாடு உரு வாக்கப்பட்ட நாளை பெரு மைப்படுத்திடும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர்-1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாரணாசி இந்து பல்கலைக் கழகம், கவுகாத்தி பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக்கழ கம் ஆகியவற்றில் இயங்கி வரும் தென்னிந்திய மொழிகள் துறையில் தலா ஒரு தமிழ் உதவிப் பேராசிரியர் பணி யிடத்தை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ் பல்கலை.க்கு ரூ.20 கோடி
ஆண்டுதோறும் ஒரு இந்திய மொழி மற்றும் ஒரு உலகமொழி ஆகியவற்றில் திருக்குறள் மொழியாக்கம் செய்து வெளியிடப்படும். “தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல்” பெயரில் தமிழ் ஆய்விருக்கை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்ப டும். ஒருங்கிணைந்த உயர் கல்வி வளர்ச்சித் திட்டத்தின் கீழ், முதன்முறையாக தமிழ் பல்கலைக்கழகத்தில் ரூ. 20 கோடியில் புதிதாக கட்டுமான வசதிகள், மேம்படுத்தப்படு கிறது.
“நீர்வள பாதுகாப்பு” பிரச்சாரம்
மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான நீர் பற்றாக் குறையை எதிர் கொள்ள வும், வரும் காலங்களில் இது போன்ற பற்றாக்குறை ஏற்படா மல் நீர் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும், தீவிர நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் சிறப்பு முயற்சியாக, நீர்வள பாதுகாப்பு இயக் கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற தீவிர பிரச்சார இயக்கம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கி ஒருமாத காலத்திற்கு செயல்படுத்தவும் இந்த இயக்கத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள், இத்தீவிர இயக்கப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்து வர் என்றும் முதலமைச்சர் அறி வித்தார்.
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
பட்டியலிடப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழ கங்களில் நாடுமுழுவதும் பயி லும், மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட் சத்துக்கும் மிகாமல் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவர்க ளுக்கு கல்வி உதவித் தொகை யாக மாணவர் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வரை முதற்கட்டமாக 100 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவ தற்கு ரூ. 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“நடந்தாய் வாழி காவேரி திட்டம்”
காவேரி ஆறு மாசுபடுவதி லிருந்து முழுமையாக மீட்டெ டுக்க, “நடந்தாய் வாழி காவேரி” என்ற திட்டத்தினை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒரு திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது. இதே போன்று பவானி, வைகை, அமராவதி மற்றும் தாமிரபரணி ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குடும்ப பாதுகாப்பு நிதி உயர்வு
கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்கள் குடும்பத் திற்கு, தற்போது வழங்கப்படும் குடும்ப நல நிதி ரூ. 2 லட்சத்தி லிருந்து 3 லட்சமாக உயர்த் தப்பட்டுள்ளது. மேலும், பணி யாளர்கள் பணியில் இருக்கும் போது உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தின் உட னடி தேவைகளை பூர்த்தி செய் வதற்கு, குடும்ப நல நிதியி லிருந்து தற்போது வழங்கப் பட்டு வரும் ரூ. 5,000 முன்பணம் 25 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. கூட்டுறவு பொது விநி யோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளர்க ளுக்கு தற்போது மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும் படி ரூ. 2 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தியுள்ளது. கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஏ.டி.எம். மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கப்பட்டு இனி அவர்களது வங்கிக் கணக்கில் மின்னணு பணப்பரிவர்த்தனை முறை மூலம் வழங்கப்படுகிறது.
கால்நடை கிளை நிலையங்கள்
தமிழ்நாட்டில் 3,000 கால் நடைகளுக்கு மேல் இருக்கும் 75 கிராமங்களில் புதிய கால் நடை கிளை நிலையங்களையும் 5,000 கால்நடைகளுக்கு மேல் இருக்கும் 25 கிராம பஞ்சாயத்துகளில் புதிய கால்நடை மருந்தகங்களும் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.