tamilnadu

img

புறவாசலில் இந்தியை நுழைக்கும் தென்னக ரயில்வே : பி.ஆர்.நடராஜன்

கோவை, ஜூன் 14– இந்தி பேசாத தென்மாநிலங்களில் ரயில்வே துறையில் இந்தியைக் கட்டாயமாக்கும் நடவடிக்கைக்குத் தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்த பிறகு சுற்றறிக்கையை திரும்பப்பெற்றுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  ரயில்வே அதிகாரிகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும்தான் பேச வேண்டும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிராந்திய மொழிகளில் பேசும்போது, அதனைப் புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது. எனவே நிலைய அதிகாரிகள் ஆங்கிலம்  மற்றும் இந்தி மொழிகளில் பேசுவதைக்  கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும், நிலைய அதிகாரிகளும் உறுதிப் படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தென்னக ரயில்வேயின் இந்த  உத்தரவு வன்மையான கண்டன த்துக்கு உரியது. கடந்த மார்ச் 9ஆம் தேதி மதுரை திருமங்கலத்தில் ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் எதிர் எதிராக இயக்கப்பட்டதற்குக் கட்டுப் பாட்டு அறைகளில் இருந்த அதி காரிகளுக்கு இடையே ஏற்பட்ட மொழிப் பிரச்சனையே காரணமாக இருந்தது. எனினும் மொழி பிரச்சனையால் ஏற்பட இருந்த மிகப்பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து இரண்டு அதிகாரிகளும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 

மொழிப் பிரச்சனையின் காரணமாக ஒரு விபத்து என்பது தமிழகத்தில் இதுவரையில் நடந்ததில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இது  புதிய அபாயத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைக்குப் பின்னரும்  தென்னக ரயில்வே எதையும் கருத்தில் கொள்ளாமல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும்தான் இந்த உத்தரவுகள் இருக்க வேண்டும் எனச் சொல்லியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் வலுவான கண்டனக் குரல் எழுந்ததையடுத்து, தென்னக ரயில்வே துறை தற்போது இந்த  சுற்றறிக்கையைத் திரும்பப்பெறு கிறோம் என அறிவித்துள்ளதாக அறிகிறோம். இதனை வரவேற்கிற அதேநேரத்தில், பழைய நடை முறை தொடர வேண்டும் என்பது மட்டுமல்ல, மாநில மொழி தெரிந்த வர்களை மட்டும்தான் பணியில் அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்து கிறோம். அது ரயில்வே மேம்பாட்டுக் காகவும், ரயில் விபத்துக்களைத் தவி ர்க்கவும் பெருமளவுக்கு பயன்படும். மத்திய அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் புறவாசல் வழியாக இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைக் கட்டாயமாகத் திணிக்கும் நடவடிக்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்பதை அழுத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

;