tamilnadu

img

திருத்தணி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி

திருவள்ளூர்,அக்.12- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி இறந்தார். தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் 12 வயது மகள் யோகேஸ்வரி. இவர், திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள சி.எஸ்.ஒ. உயர்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் யோகேஸ்வரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். யோகேஸ்வரிக்கு காய்ச்சல் அதிகமாகவே மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும் , அங்கிருந்து சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு யோகேஸ்வரிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் சனிக்கிழமையன்று காலையில் சிகிச்சை பலனின்றி யோகேஸ்வரி உயிரிழந்தார். ஏற்கெனவே திருத்தணி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை ஒன்று இறந்துள்ளது.

;