சென்னை,நவ.16- சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நில வரத்தை காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, சனிக்கிழமையன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 76.68 ரூபாயாக உள்ளது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகளும் மக்களும் கவலையடைந்துள்ளனர்.