பழனி,செப்.20- திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள பிரபலமான பஞ்சாமிர்த கடை உரிமையாளர் வீட்டில் வெள்ளியன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பழனி அடிவாரம் பகுதியில் பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி விற்பனை செய்யும் கடைகளில் ஆகஸ்ட் மாத இறுதியில் வருமானவரித் துறை மற்றும் வருமானவரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ.90 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. வெள்ளியன்று காலை மதுரையில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து சோதனையை நடத்தினர்.