tamilnadu

img

25 ஆண்டுகள் பணிபுரிந்த பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசு

சென்னை,பிப்.20- 25 ஆண்டுகள் சிறப்பாக பணி புரிந்த பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,  பள்ளிக்கல்வி இயக்கக நிதி  கட்டுப்பாட்டு அலுவலரின் செயல் முறைகளின்படி அரசு உயர், மேல் நிலைப்பள்ளிகளில் 25 ஆண்டுகள் மாசின்றி, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணி யாளர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கள் பள்ளியில் 25 ஆண்டுகள் மாசின்றி பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் விவரங்களை, தலைமை ஆசிரியரின் பரிந்துரை கடிதத்துடன் 21 ஆம்  தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.