தினசரி வேலைக்குச் சென்ற போதும் சரி, கொரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்த போதும் சரி, தினமும் காலை இட்லியையோ, தோசையையோ சுவைக்காமல் எந்தவொரு மனிதராலும் இருக்க முடியாது. அப்படிக் கொண்டாடும் ஒரு உணவை எளிதாக்கி பக்குவப்படுத்தித் தந்த பெருமை கோவைக்கே உண்டு. பூ போன்ற இட்லி பெறுவதற்கு முக்கியமான வெட் கிரைண்டர்களை இந்திய அளவில் 80 சதகிவிகிதம் கோவை மாவட்டமே இன்றுவரை தயாரித்துக் கொடுத்து வருகிறது. இந்தியாவில் ஒரு மாதத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு லட்சம் வெட் கிரைண்டர்களில் சுமார் 80 ஆயிரம் வெட் கிரைண்டர்கள் கோவையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவையில் உற்பத்தி செய்யப்படும் வெட்கிரைண்டர்களில் 80 சதவிகிதம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. மீதமுள்ள 20 சதவிகித உற்பத்தி மற்ற வட மாநிலங்களுக்கும், இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இவ்வாறு வெட்கிரைண்டர்கள் மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்த ஆண்டு வருவாய் சுமார் 300 கோடியாகும். இதில் கோவையின் பங்களிப்பு மட்டும் சுமார் 225 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாநகரின் மையப்பகுதியைச் சுற்றி சுமார் 25 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ள இந்நிறுவனங்களின் வாயிலாக நேரடியாக 20 ஆயிரம் பேரும், மறைமுகமாக 50 ஆயிரம் பேரும் பணி பெற்று வருவாய் ஈட்டி வருகின்றனர். இவ்வாறு இந்தியாவின் தொழில் வளர்ச்சியின் முக்கியப் பாத்திரம் வகித்த கோவையின் கிரைண்டர் உற்பத்தி தற்போது கொரோனாவால் பெரும்பாலும் முடங்கி விட்டது என்றே கூற வேண்டும். ஏற்கனவே, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் நெருக்கடியை சந்தித்து வந்த இத்தொழிலைச் சார்ந்தவர்கள், தற்போது முழு ஊரடங்கால் வணிகப் பயன்பாட்டிற்கான ஒட்டுமொத்த தயாரிப்பினை இழந்ததால் மீண்டும் பெரிய அடியினை சந்தித்துள்ளனர். இதுகுறித்து வெட் கிரைண்டர் தயாரிப்பாளர்கள் சிலரை சந்தித்தபோது கூறியதாவது..
உணவிற்கு போராடுபவர்கள் கிரைண்டர் வாங்குவார்களா?
கிரைண்டர் மற்றும் மோட்டார்களை பல வருடங்களாக தயாரித்து வரும் சௌந்தர் குமார் என்பவர் குறிப்பிடுகையில், 1950 ஆம் ஆண்டு வாக்கில், கிடைக்கும் உதிரிபாகப் பொருட்களை வைத்து கிரைண்டர் உற்பத்தி செய்யும் தொழில் கோவையில் வளர ஆரம்பித்தது. கோவையில் கிடைக்கும் கற்கள் சரியாக கடைவதற்கும், பத மாக மாவைப் பிசைவதற்கும் பேர்போனதாய் இருந்ததால் நன்றாக தொழில் பிடித்தது. இவ்வாறாக உலகம் முழுக்க நம் கோவையில் உற்பத்தி செய்யப்படும் கிரைண்டர்கள் ஏற்று மதி செய்யப்படும். இருப்பினும் நாங்கள் அங்கீ கரிக்கப்படாத சிறு, குறு நிறுவனங்களாகத்தான் இங்கு உற்பத்தி செய்து வந்தோம். நாங்கள் எதிர்கொண்ட முதல் பெரிய ஆர்டர் என்பது 2012 ஆம் ஆண்டு தமிழக அரசால் இலவச வெட் கிரைண்டர் வழங்கும் திட்டத்தினை கோவையின் உற்பத்தியாளர்கள் செய்தனர். 12 வருடங்கள் செய்திருக்க வேண்டிய உற்பத்தி யினை ஒட்டுமொத்தமாக அந்த ஆர்டரில் மட்டும் செய்து முடித்தோம். இது பார்ப்பதற்கு கவர்ச்சி அறிவிப்பாகத் தோன்றினாலும் நாங்கள் எதிர் பார்த்த அளவு லாபம் இதில் கிடைக்கவில்லை. மேலும் சாதாரண கிரைண்டர் உற்பத்தியாளர் கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
இதன்பின் வந்த பணமதிப்பிழப்பு மற் றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவை உண்மை யில் எங்களை திக்குமுக்காடச் செய்தன. முன்னதாக இருந்த பதினான்கரை சத வரி விதிப்பே எங்களுக்கு கடும் சுமையாக இருந் தது. மொத்த லாபமே 10 சதத்திற்குள் இருக்கை யில் இவ்வளவு வரி என்பது பாரமாகவே இருந் தது. தற்போது ஜி.எஸ்.டி வரியைப் பொறுத்த வரை நாங்கள் 28 சதம் போட்டு வாங்கி விற் கும்போது அதைத் தயாரிக்க நாங்கள் தயாராக இருந்தாலும், அதை வாங்க நுகர்வோர் தயாராக இருக்க மாட்டார்கள். மேலும், ஜி.எஸ்.டி ரீபண்டு சரியாக அரசிடமிருந்து எங்களுக்கு வர வில்லை. கொரோனா காலத்தில் கமர்சியல் (திருமணம் போன்ற சுபதின நிகழ்வு உப யோகிப்பு) விற்பனை ஒட்டுமொத்தமாக பாதிக் கப்பட்டு விட்டது. வீட்டு விற்பனையைப் பொறுத்தவரை அவரவர் தினந்தோறும் உணவிற்கே போராடி வரும் நிலையில் 2500 ரூபாய் போட்டு கிரைண்டர் எவ்வாறு வாங்கு வார்கள்? ரூ.20 லட்சம் கோடி நிவாரண அறி விப்பை வெளியிட்ட மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு வங்கிகளைத் தான் கை காட்டினவே தவிர, அரசின் தரப்பிலிருந்து எந்தவொரு நேரடி உதவியையும் வழங்கவில்லை. அவ்வாறு வழங்கும் கடன்களிலும் ஆயிரத்தெட்டு வழி முறைகளை கடைபிடிக்கச் சொல்லி அதையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டனர்.
எங்கள் தொழிலில் உள்ள புலம்பெயர் தொழிலாளர் என்போர் தஞ்சாவூர், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர் கள்தான். இவர்களில் பெரும்பாலனோர் தற் போது தங்களது ஊர்களுக்குச் சென்று விட்ட னர். மேலும், நலவாரியத்தில் சாராத இத்தொழி லைச் சார்ந்த பல குடிசைத் தொழிலாளர்கள் உள்ளனர். உதாரணத்திற்கு கிரைண்டருக்குத் தேவையான கற்களை எடுக்கும் தொழில் செய் யும் மக்கள் போன்றோருக்கு எங்களால் முடிந்த அளவு தான் உதவி செய்ய முடியும். நிரந்தர நிவா ரணம் அரசு தான் வழங்க வேண்டும். எங்க ளின் சொந்த முயற்சியால் ஒரு சில கிரைண் டர் உற்பத்தியாளர்களிடம் கடன் வழங்க உதவ தொடர்பு கொண்டபோது பெரும்பாலும் யாரும் கடன்வாங்கக் கூட முன்வரவில்லை. இருக்கும் சிரமத்தில் இக்கடனை வேறு வாங்கி, யார் கட்டு வது என யோசிக்கின்றனர். ஆக மக்களின் நுகர் வுத்திறனை அதிகரிக்கத்தான் அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மேன்மேலும் கடன்களைக் கொடுத்து பாழங்குழியில் மக் களை தள்ளக் கூடாது. உலகளவில் கோவை யின் கிரைண்டர் புகழ் பரவி இருந்தாலும் எங்களுக்கென அரசு உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல, இப்பேரிட லும் எங்களைக் கை விட்டிருப்பது வேதனையா னதாகும். இவ்வாறு அவர் கூறினார்.
பொதுப் போக்குவரத்து இல்லாதது பெரிய அடி
40 வருடங்களாக கிரைண்டர் மற்றும் சமையலறைக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்துவரும் பாலசந்திரன் என்பவர் கூறுகையில், தற் போதைய சூழலைப் பொறுத்த வரை பொதுப் போக்கு வரத்து இல்லாதது எங்களுக்குப் பெரிய அடி.. நாங்கள் உற் பத்தி செய்வதில் 10 சதத்திற்கும் கீழே தான் கோவையில் விற்கப் படும். மற்ற அனைத்தையும் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப் படும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது சிக் கல் எழுந்துள்ளது. கிரைண் டர் உற்பத்திக்கு மிக முக்கியம் எஃக்குதான். அது சென்னையில் இருந்து கோவைக்கு வருவதிலும் தற்போது பிரச் சனை உள்ளது. ஜி.எஸ்.டி-யைப் பொறுத்தவரை நான் கிரைண்டருடன் வேறு சில உபகரணங்களையும் உற்பத்தி செய்வதால் என்னால் ஓரளவு சரிக்கட்ட முடிகிறது. ஆனால், கிரைண்டரை மட்டும் உற்பத்தி செய்பவர்க ளுக்கு இது அவ்வாறு இருக்காது. சற்று சிரமமாகவே இருக்கும். இதனால் கிரைண்டரோடு சேர்த்து வேறு சில பொருட்களையும் உற்பத்தி செய்ய தற்போது ஆலோ சித்து வருகின்றனர். உலகம் முழுக்க கோவையின் கிரைண்டர் பிரப லமாகக் காரணம் இங்கு கிடைக்கும் கல்லின் சிறப்பம் சமாகும். தற்சமயம் ஆர்டர்கள் எங்களுக்கு மிகவும் குறைவாக இருந்ததால் தொழிலாளர்களின் புலம் பெயர்வு என்பது எங்களை பாதிக்கவில்லை. ஏறத்தாழ 40-50 ஆயிரம் உற்பத்தியாளர்கள் கோவையில் மட்டும் உள்ளனர். என்னால் ஓரளவு சமாளித்து வெளியே வர முடி யும். ஆனால், தற்போதைய தொடக்க உற்பத்தியாளர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவர். இதுகுறித்தெல்லாம் அரசிடம் கொண்டு சென்றபோதும், கொரோனா ஊரடங்கால் அரசு பெறும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதில் சிரமம் உள்ள தாக தெரிவிக்கிறது. இது ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருந் தாலும்கூட ஒருசில நடவடிக்கைகளையாவது அரசு முன் னேடுக்கலாம். இவ்வாறு அவர் கூறுகிறார்.
கடன் வாங்கவும் அச்சமாக உள்ளது
15 வருடங்களாக கோவையில் வெட் கிரைண்டர் உற்பத்தி செய் யும் தொழில் புரிந்து வரும் பாண்டி யன் என்பவர் கூறுகையில், ஆங் காங்கே சிறிதாக உற்பத்தி செய்து வந்த நாங்கள் தமிழக அரசின் இல வச கிரைண்டர் வழங்கும் திட்டத் தால் அதிகப்படியான உற்பத் தியை மேற்கொண்டோம். ஆனால், அதற்குப்பின் தான் நாங்கள் அதிக சவால்களை எதிர்கொண் டோம். இலவச கிரைண்டர் வழங்கப் பட்டதால் மக்கள் இதனை அதிகம் விலை கொடுத்து வாங்கவில்லை. இதற்குப்பின் தட்டுத்தடுமாறி வந்த போது பணமதிப்பிழப்பு நடவடிக் கையால் அடிபட்டோம். இதிலி ருந்து மீள முயற்சிக்கும் போது ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் சிக்கி விட் டோம். இவ்வரி பல அறிவுறுத்தல் கள் மற்றும் போராட்டத்தினால், எல்லாம் சரியாகும் தருணத்தில் கொரோனா ஊர டக்கம் இதனையும் முடக்கி விட்டது.
மேலும், எங்களுக்குத் தேவை யான மூலப்பொருட்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. முன்னே 30 பேர் வரை வைத்து வேலை செய்து வந் தேன். தற்போது 6-7 பேர் தான் வேலைக்கு வைத்துள்ளேன். புலம் பெயர்வு ஒரு காரணம் என்பதைத் தாண்டி மக்களின் நுகர்வுத்திறன் முக்கியப் பாத்திரமாகும். அரசு அறி வித்த கடன் அறிவிப்பில் அவை அனைத்தும் ஒருசிலருக்கே 10-20 சதம் வரை கிடைக்கிறது, எங்களைப் போன்றோருக்கும் புதிதாக இத்தொழி லைச் செய்ய ஆரம்பித்தவருக்கும் அர சின் இவ்வுதவி என்பது வீண் அறி விப்பே. இதனால் பாதிக்கப்பட்டது நாங் கள் மட்டுமல்ல, எங்களைச் சார்ந்த பலரும் தான். அதாவது மோல்டிங் செய்பவர்கள், டிரம் மோல்டிங் செய்து தருபவர்கள், கல் உடைத்துக் கொடுப்ப வர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ள னர். பொதுவாக நாங்கள் டீலர்களி டம் தான் விற்போம். ஆனால், இக் கொரோனா காலத்தில் உற்பத்திக்கான பணம் திரும்ப கிடைக்குமா என்ற அச்சத்தில், நம்பி உற்பத்தி செய்து தரவும் பயமாக உள்ளது. இதனால் அரசின் கடன் வாங்கி தொழிலில் போடவும் அச்சமாக உள்ளது. கோரிக் கையாக நான் முன்வைப்பது, வாங்கிய கடன்களை ஒருசில மாதம் தள்ளி வைக்க வேண்டும். முக்கியமாக இக்காலத்திற்கு வட்டி வசூல் செய்யக் கூடாது. மின்சாரக் கட்டணம் சில மாதங்களுக்கு ரத்து செய்யப்படலாம். ஆக புதிதாக கடன் வழங்க வேண்டும் என்பதைத் தாண்டி இவற்றையெல் லாம் அரசு தள்ளுபடி செய்தாலே போது மென நான் நினைக்கிறேன்.
கோவையில் தற்போது 10 சதவிகி தத்தினர் இத்தொழிலிருந்து வெளியே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்ட னர். இவற்றையெல்லாம் சரிசெய்யும் கடமை அரசிற்கே உள்ள நிலையில், அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறுகிறார்.