உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஒவ்வொரு துறையாக இன்று முதல் அறிவிக்கப்பட உள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறை வாரியாக இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.
அதன்படி, 2020ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கல் ஹங்டன், சார்லஸ் எம்.ரைஸ் ஆகிய மூன்று பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெபாடிடிஸ் சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. 7ம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 8ம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசும், 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது. அதன்பின்னர் 12ம் தேதி ஆல்பிரட் நோபலின் நினைவாக ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் வழங்கும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.