tamilnadu

img

நெல்லை: சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ  

நெல்லையில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

நெல்லை மாவட்டம் ஆவரைக்குளத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் வள்ளியூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பக்கத்திலிருந்து கரும்புகை வந்துள்ளது. இதையடுத்து காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு செல்வகுமார் கீழே இறங்கியுள்ளார்.

அவர் இறங்கிய சிறிது நேரத்திலேயே, கார் முழுவதும் தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்து முற்றிலும் நாசமாகின.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

;