tamilnadu

img

சமுதாயக்கூடம் கட்டித்தரக் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

உதகை,பிப்.17- நெடிக்காடு கிராமத்தில் சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நீலகிரி மாவட்டம், அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நெடிக்காடு கிராமத்தில் சமுதாயக்கூடம், பேரூராட்சி அலு வலகம் ஆகியவை அமைத்துக்கொள்ள 20 சென்ட்  நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இடத் தில் சமுதாயக்கூடம் அமைக்காமல் அதிகாரிகள் மெத்த னம் காட்டி வந்தனர். இந்நிலையில், ஒதுக்கப்பட்ட இடத்தில் சமுதாயக்கூடம் கட்டித் தரவேண்டும். அதிக ரட்டி பேருந்து நிலையம், அதிகரட்டி மேல் பகுதி, நெடிக்காடு ஆகிய பகுதிகளில் பொதுக்கழிப்பிடம் ஏற்படுத்தி தரவேண்டும். அதிகரட்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி நெடிக்காடு பகுதியில் பேருந்து நிழல் குடை அமைத்து தர வேண்டும் என்பது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பகுதியினர் திங்களன்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக செயல் அலுவலர் உறுதியளித்தார். இதன் பின்னர் அனை வரும் கலைந்து சென்றனர். முன்னதாக இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.ஆல்துரை தலைமை தாங்கினார். பேச்சுவார்த்தையின் போது கொலக்கம்பை காவல் ஆய்வாளர் ஆறுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.