tamilnadu

img

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு சிஐடியு உதவி

உதகை. மே 10 - உதகையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளம் பெண் ணின் குடும்பத்தாருக்கு சிஐடியு சங்கத்தினர் ஆறுதல் கூறி, நிவாரண உதவிப்பொருட்களை வழங்கினர்.   நீலகிரி மாவட்டம், அதிகரட்டி பேரூராட்சிக்கு உட் பட்ட குன்னகொம்பை அருகில் உள்ள ஆடாவேலி எஸ்டேட் பகுதியில் வசிப்பவர் அம்மாசை. கடந்த வியாழ னன்று மின் விபத்தில் இவரது மகள்  மங்கம்மா (19)  பலியானார். இந்நிலையில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்மேளன துணைத்தலைவர் ஜெ. ஆல்தொரை, சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் சனி யன்று மின் விபத்தில் பலியான மங்கம்மாவின் இல்லத் திற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய துடன், மளிகைப் பொருட்களை வழங்கினர்.

;