நாகப்பட்டினம் சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளியில் சீகன்பால்கு தமிழ் இலக்கிய மன்ற ஆண்டு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. பள்ளி தாளாளர் டி.கே.சேகர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை இ.ஜெசிந்தா முன்னிலை வகித்தார். விழிமின் எழுமின் எனும் பொருளில் பத்திரிகையாளர் கவின்மலர் சிறப்புரையாற்றினார்.