tamilnadu

ஆண்டிப்பட்டி அருகே சிறுத்தை தோல் விற்க முயன்ற 3 பேர் கைது

தேனி, ஜூன் 6-கேரள எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தைகளை வேட்டையாடி தோல் விற்பனைசெய்யப்பட்டு வருவதாக கேரளமாநிலம் தேக்கடி வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிறுத்தை தோல் விற்பனை செய்பவர்கள் குறித்து கிடைத்த ரகசியதகவல் கிடைத்ததை தொடர்ந்து, கேரள வனத்துறையினர் தேனி மாவட்டவனத்துறையினரின் உதவியோடு ஆண்டிபட்டி பகுதிக்கு வியாழக் கிழமை வந்திருந்தனர். அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அந்த பகுதியில் 2 இருசக்கர வாகனங்களில் சென்றவர் களை விரட்டி சென்றனர். ஆண்டிபட்டி அடுத்துள்ள டி.பொம்மிநாய க்கன்பட்டி விலக்கு பகுதியில் சென்றஅவர்களை மடக்கி பிடித்து சோத னை செய்த போது அவர்களிடம் சிறுத்தையின் தோல் ஓன்று இருப்பது தெரியவந்தது.3 பேரிடம் மேற்கொண்ட விசாரணையில் இருவர் மதுரை மாவட்டம், கே.போத்தம்பட்டியை சேர்ந்த ஜேம்ஸ் என்பவரின் மகன் ராஜா(37), அதே பகுதியில் மானூத்து கிராமத்தை சேர்ந்த விருமத்தேவர் என்பவரின் செல்லப்பாண்டி(49) என்றும், மற்றொருவர் வருசநாடு அருகே உள்ளநந்தனார்புரம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் பாண்டி(35) என்பதும் தெரியவந்தது. மேலும் 3 பேரும் சிறுத்தை புலியின்தோலை ரூ. 5 லட்சத்திற்கு விற்பனை செய்வதற்காக கொண்டுசெல்வதாகவும் தெரிவித்தனர். சிறுத்தை எங்கு வேட்டையாடப்பட்டது, இந்த வேட்டையில் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா? என்பது குறித்து ஆண்டிபட்டி வனத்துறை அலுவலகத்தில் வைத்து 3 பேரிடமும்தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து 3 பேர் மீதும் வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் நீதிபதி மகேந்திர வர்மா முன்பு வனத்துறையினர் ஆஜர்படுத்தினர். விசாரணையில் வழக்குப்பதிவு செய்ததற்கான முறையான ஆவணங்களை வனத்துறை யினர் கொடுக்காததால் 3 பேரையும்சிறையில் அடைப்பதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்து முறையான ஆவணங்களோடு வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்துமாறு வனத்துறை யினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.