தேனி:
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ளபூமலைக்குண்டு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (34). லாரி ஓட்டுநர். இவரது மனைவி ஜெயப்பிரியா. இவர்களுக்கு பூவிகா(6), ரித்திகா (4) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சனிக்கிழமை ராஜ்குமார் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதையடுத்து அவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் மனம் உடைந்தராஜ்குமார் மனைவியையும், மூத்த மகளையும் வீட்டுக்கு வெளியே தள்ளி கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். பின்னர் அவர் தனதுஇளைய மகள் ரித்திகாவுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்தார்.இதையடுத்து ஜெயப்பிரியா கதவைத் திறக்குமாறு கூச்சல் போட்டார். எனினும் கதவுதிறக்கப்படவில்லை. பின்னர் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்துஉள்ளே சென்றனர். வீட்டுக்குள் ராஜ்குமாரும், ரித்திகாவும் மயங்கிக் கிடந்தனர். இதையடுத்துஅவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் உயிரிழந்தார். ரித்திகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துவீரபாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.