tamilnadu

img

குற்றால அருவிகளில் தண்ணீர் விழ துவங்கியது

தென்காசி, ஜூன் 6- குற்றாலத்தில் அருவிக ளில் தண்ணீர் விழ துவங்கி யது. ஆனால் பயணிக ளுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. கொரோனா வைரஸ்பர வல் காரணமாக தளர்வுகளு டன் 5 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொது மக்கள் கூடும் இடங்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கேரள மாநிலத்தில் பெய்த மழை காரணமாக தென்னகத்தின் ஸ்பா என அழைக்கப்படும் குற்றால அருவிகளிலும் நன்றாக தண்ணீர் விழ  தொடங்கியது. ஐந்தரு வியில் 4 கிளைகளில் தண்ணீர் விழ துவங்கி யுள்ளது. ஆனால் ஊர டங்கு காரணமாக 144 தடை  உத்தரவு அமலில் உள்ளதால் அருவிக்கரைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே அருவிப்பகுதிக்கு மக்கள் செல்ல அனுமதி வழங்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது.