tamilnadu

img

சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலை மக்கள் நல போராட்டக் குழு கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜுலை 2- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மெயின்பஜார் காமராஜர் சிலை அருகே  செல்போன் கடை நடத்தி வந்த ஜெய ராஜ்(55), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகி யோரை சித்ரவதை செய்து கொலை செய்த  சாத்தான்குளம் காவல்துறையினரை கண்டித்து பெரம்பலூரில் மக்கள் நல போரா ட்டக் குழு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவ ட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்ல துரை தலைமை வகித்தார். தமிழக விவசாயி கள் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம், சிபிஐ மாவட்ட செயலாளர் வீ.ஞான சேகரன் மற்றும் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீண்டாமை ஒழிப்பு முண்ணனி நிர்வாகி வழக்கறிஞர் ப.காம ராஜ் உள்பட அனைத்துக் கட்சியின் தலை வர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் நன்றி கூறினார்.

;