மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன் - குணவதி ஆகியோரின் புதல்வி பி.பரணி-பி.ஜெகதீஸ் திருமண வரவேற்பு விழா கடந்த திங்கள்கிழமை ஆலங்குடியில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் நடைபெற்ற வரவேற்வு விழாவில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை, சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வி.மெய்யநாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.