tamilnadu

img

தூத்துக்குடியில் துறைமுக ஊழியர் தற்கொலை

தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரை சேர்ந்தவர் சவேரியார் பிச்சை மகன் வின்சென்ட் (59). வ.உ.சி. துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஜான்சி ராணி. . இவர்களது வீட்டில் பீரோவில் இருந்த சுமார் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை யாரோ மர்ம நபர் கொள்ளையடித்து சென்றதாக ஜான்சி ராணிபுகார் அளித்தார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஜான்சி ராணி (57), கணவரின் கஞ்சத்தனத்தின் காரணமாக நகையை திருடியதோடு குடும்பத்தாரை ஏமாற்றும் விதமாக கொள்ளை சம்பவ நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனால் மனைவி தன்னை ஏமாற்றி விட்டதாக வின்சென்ட் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாயன்று அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தாளமுத்து நகர் காவல் ஆய்வாளர் பிரேமா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

;