tamilnadu

பாலியல் துன்புறுத்தலால் தற்கொலைக்கு முயன்ற சிறுமியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு, ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்குக!

தூத்துக்குடி, மே 19- பாலியல் துன்புறுத்த லுக்கு உள்ளாக்கப்பட்டு, தற்கொலைக்கு முயன்ற  சிறுமிக்கு நீதி வழங்க  வேண்டுமென அனைத்தி ந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பி.பூம யில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்ட த்தைச் சேர்ந்த 17 வயது  சிறுமி ஒருவர், பிளஸ் 1 படி ப்பை நிறுத்திவிட்டு குளத்தூ ரில் ஒரு அறக்கட்டளை அலு வலகத்தில் கணக்கு எழுதும்  வேலை செய்து வந்தார். அவர் பாலியல் துன்பு றுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார்.

அவரது தாயாரின் புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  மேற்படி வழக்கை விசா ரணை செய்ததில், வீரபாண்டி யன் மகன் சரவணக்குமார் செல்போனில் அடிக்கடி போன் செய்து சிறுமியை தொந்தரவு செய்துள்ளார். மேற்படி சரவணனும் அவ ரது நண்பர் வேல்சாமி மற்றும்  இளஞ்சிறார் ஆகியோர் தங்களது செல்போனில் இருந்து சிறுமி செல்போ னிற்கு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மே 8  அன்று இரவு 7 மணியிலி ருந்து 9 மணி வரை சரவணன்,  வேல்சாமி, இளஞ்சிறார் மூவ ரும் சிறுமி வீட்டருகே வந்து,  சிறுமியை பார்த்து, ‘ஏன் செல்போனை ஆப் செய் தாய். அதை ஆன் பண்ணு நாளை காலை  நான் கூப்பிட்ட இடத்திற்கு  வரவேண்டும் இல்லை யென்றால் உன்னையும், உன்  குடும்பத்தையும் தீ வைத்து  கொளுத்தி எரித்து விடு வோம்’ என்று திரும்ப திரும்ப  கொலை மிரட்டல் விடுத்த தால் அந்த சிறுமி மனவேத னையடைந்து மே 9 அன்று  தானாக உடலில் மண்ணெ ண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் படு காயமடைந்தார்.

தற்போது மருத்துவமனையில் ஆபத் தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி தற்கொலைக்கு தூண்டப் பட்ட அச்சிறுமியின் குடும்பத் திற்கு ரூ.10 லட்சம் நிவா ரண உதவி வழங்க வேண்டும்,  குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவர முடியாத வகை யில் நடவடிக்கைகளை விரை வுபடுத்தி குற்றவாளிக ளுக்கு உரிய தண்டனையை  விரைவில் வழங்கிட நடவ டிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டுள்ள சிறுமி யின் குடும்பத்திற்கு பாது காப்பு அளிக்க வேண்டும். சிறுமி குணமடைந்த பிறகு அவருக்கு அரசு வேலை வழங்கி உதவிட வேண்டும். இவ்வாறு அதில் வலி யுறுத்தியுள்ளார்.