tamilnadu

img

பெண் டாக்டர் ,குழந்தைகளுடன் கொரோனா வார்டில் அனுமதி 

தூத்துக்குடி:
காயல்பட்டணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காயல்பட்டணத்தை சேர்ந்த ஒருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மனைவியான பெண் டாக்டர், மற்றும் அவர்களது 3 குழந்தைகள், பெண் டாக்டரின் மாமியார் உட்பட 5 பேர் ஞாயிறன்று காலை கடுமையான சளி மற்றும் இருமலுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது மாதிரி எடுக்கப்பட்டு நெல்லையிலுள்ள கொரோனா ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சோதனை முடிவுகளுக்கு பிறகே அவர்களுக்கு கொரோனோ தொற்று உள்ளதா இல்லையா என தெரியவரும். ஏற்கனவே காயல்பட்டணம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு குடும்பமே கொரோனா அறிகுறியுடன் அனுமதி க்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

;