திருவாரூர், டிச.22- திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பி னர் பொறுப்பிற்கு நன்னிலம் வட்டம் நான்காவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஜ.முகமது உதுமான் (35) போட்டியிடுகின்றார். இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளராக பணியாற்றி யுள்ளார். தற்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளராக திறம்பட செயலாற்றி வரு கிறார். சேவை மனப்பான்மை கொண்ட இவர் மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவி களை பெற்றுத்தருவது, மக்கள் நல பணி களை முன்னெடுப்பது போன்றவற்றின் மூலமாக நன்மதிப்பை பெற்றுள்ளார். இவ ரது வெற்றியை உறுதிபடுத்தும் வகையில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வட்டார ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பொறுப்பிற்கு பனிரெண்டு பேர் போட்டியிடுகின்றனர். அதன்படி கே. சுப்ரமணியன் (56- வலங்கைமான் வார்டு எண்-15). இவர் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக உள்ளார். கு.வேதரெத்தினம் (67– திருத்துறைப்பூண்டி வார்டு எண்- 13). இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். ஆசிரியர் இயக்க மூத்த தலை வர். எழுத்தாளர் சங்கத்தின் மூத்த நிர்வாகி. தற்போது திருத்துறைப்பூண்டி கட்சியின் நகரக்குழு உறுப்பினராக பணியாற்றி வரு கிறார். கே.ஜெயா (46- குடவாசல் வார்டு எண்- 10) இவர் கட்சி உறுப்பினராக உள்ளார். டி.கனகம் (52– கூத்தாநல்லூர் வார்டு எண் - 8) இவர் மாதர் சங்க உறுப்பின ராக உள்ளார். இவரது கணவர் எம்.திரு ஞானம் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலாளராக உள்ளார். ஜி.வசந்தா (திரு வாரூர் வார்டு எண் - 16) இவர் மாதர் சங்க உறுப்பினர். பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர். இவரது கணவர் என். கணேசன் கட்சி கிளைச் செயலாளராக உள்ளார். கே.பொற்கொடி (37 – நீடாமங்க லம் வார்டு எண்- 7) இவர் கட்சியின் மாதர் சங்க உறுப்பினர். இவரது கணவர் கந்த சாமி மாவட்ட பி.செயற்குழு உறுப்பின ராக பணியாற்றி வருகின்றார். ஆர்.மருதையன் (61- கொரடாச்சேரி வார்டு எண்- 7) இவர் கட்சியின் மூத்த தலைவர். களப் போராட்ட வீரர். கட்சி யின் ஒன்றியக்குழு உறுப்பினராக உள் ளார். எஸ்.அமுதா (52– கொரடாச்சேரி வார்டு எண்- 17) இவர் மாதர் சங்க உறுப்பின ராக உள்ளார். உ.மார்க்ஸ் (46– மன்னார் குடி வார்டு எண் - 19) ஆட்டோ ஓட்டுநராக உள்ள இவர் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார். கஜா புயல் தாக்கத்தின் போது நிவாரணப் பணி களில் ஈடுபட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றவராக உள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் இதே பொறுப்பிற்கு போட்டி யிட்டு இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வி.மாரியப்பன் (50- கோட்டூர்- வார்டு எண் -16) இவர் விவசாயிகள் சங்க ஒன்றி யக்குழு உறுப்பினராக உள்ளார். ஆர். விஜயா (44 – முத்துப்பேட்டை வார்டு எண் - 10) இவர் மாதர் சங்க உறுப்பினர். தியாகு. ரஜினிகாந்த் (42 – நன்னிலம் வார்டு எண் - 6) இவர் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர். களப்போராளி. பட்டிமன்ற பேச்சா ளர். நன்னிலம் நையாண்டி கலைக்குழு வின் கன்வீனர். இவர் சமரசமற்ற அணுகு முறையால் சமூக விரோதிகளின் சவால் களை அடிக்கடி சமாளித்தவர். ஊராட்சி மன்றம் மாவட்டத்தில் 39 கிராம ஊராட்சி களில் கிராம பொறுப்பிற்கு கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர். அதன்விப ரம் பின்வருமாறு: டி.சுப்ரமணியன் (வரம்பி யம்), ரெங்கன் (சேகல்), எம்.கௌசல்யா (கச்சனம்), ஜெ.பத்மினி (கோமல்), எச்.முத்துக் குமாரசாமி (அம்மனூர்), எஸ்.ராஜேந்தி ரன் (ஆலத்தம்பாடி), கே.செங்கொடி (இருள் நீக்கி), ஸ்டாலின் (ஒரத்தூர்), கே.தமிழ்மணி (பாலையூர்), என்.ராதா (சாரநத்தம்), ஜெ. நடராஜன் (மாணிக்கமங்களம்), ஜெ. நித்தியா (கீழவிடையல்), எஸ்.இளங்கோ வன் (பூனாயிருப்பு), என்.நாகப்பன் (அரை யூர்), எஸ்.பானுப்பிரியா (கொட்டையூர்), கே.கல்பனாதேவி (ஒலிமதி), அறிவா னந்தம் (தேவங்குடி), எஸ்.ரகுபதி (திருக்கர வாசல்), பி.ஆர்.தியாகராஜன் (பின்ன வாசல்), பி.மாதவன் (வேப்பத்தாங்குடி), ஆர்.எஸ்.சுந்தய்யா (புதுபத்தூர்), வி.பாலு (புலிவலம்), ராஜகுரு (சிருவளுர்), ஆர்.சுந்தரமூர்த்தி (திருமியச்ச்சூர்). ஆர்.நடராஜன் (மேலப்பாளுர்), எம். பாலகிருஷ்ணன் (மணப்பாரை), அ. ஆரோக்கியமேரி (திருக்குடி), உ.காளி முத்து (புதுக்குடி), கே.குமரேசன் (பிரதா ராமபுரம்), அ.விஜயா (மருதவாஞ்சேரி), எல்.சுலோச்சனா (அரசவனங்காடு), என்.முருகேசன் (செம்மங்குடி), கே.காமராஜ் (முசிறியம்), பூபதி கோபிராஜ் (வட கண்டம்), பி.விஜயநிர்மலா (உதய மார்த்தாண்டபுரம்), பி.வசந்தா (கீழ பெருமழை), கே.பழனிச்சாமி (வங்கநகர்), எல்.டி.வீரசேனன் (இடும்பவனம்), பி.ராமச்சந்திரன் (தில்லைவளாகம்). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர்கள் அனைவரும் வெற்றி பெறும் வகை யிலும், திமுக, சிபிஐ, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறவும், மாவட்டத்தில் வலுவான சக்தியாக விளங்கக் கூடிய திமுக கூட்டணி மாவட்டத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வெற்றி பெறவும் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், வர்க்க, வெகுஜன அரங்க தோழர்கள், ஆத ரவாளர்கள் என அனைவரும் தங்களின் முழு உழைப்பை செலுத்திட வேண்டும். வரலாற்றில் இடம்பெறும் வெற்றியாக இந்த வெற்றி அமைந்திட பாடுபட வேண் டும் என கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.