குடவாசல், செப்.23- திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் மதகரம் ஊராட்சி கச்சபத்து கிராமத்தில் பல்வேறு அரசியல் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். வலங்கைமான் ஒன்றியம் மதகரம் ஊராட்சி கச்சபத்து கிராமத்தில் அசோக்குமார், வெள்ளைசாமி ஆகியோர் தலை மையில், பல்வேறு அரசியல் கட்சியில் இருந்து விலகி 15 குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் செங்கொடி ஏற்றிவைத்து கட்சியில் இணைந்த 15 குடும்ப உறுப்பினர்களுக்கும் செந்துண்டு அணி வித்து வரவேற்று உரையாற்றினார். வலங்கைமான் ஒன்றிய செயலாளர் என்.இராதா, விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் என்.பாலையை, விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய தலைவர் டி.சண்முகம் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெ.ஜெயராஜ், கே.கலிய பெருமாள், காமராஜ், கச்சைப்பத்து கிளை செயலாளர் பால் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.