கார் மீது கண்டெய்னர் லாரி மோதல்: 3 பேர் பலி
திருவள்ளூர், ஜூன் 22- சென்னை பம்மல் பகுதியை சேர்ந்தவர் சாய் சந்திரசேகர் (35). காப்பீட்டு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி புஷ்கலா (35). இவர்களுக்கு கைலாஷ் (9), தருண் கிருஷ்ணா(3) ஆகிய இரு மகன்கள் உள்ள னர். சாய் சந்திரசேகர் திங்களன்று குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று, வீட்டிற்கு திரும்பிக் கொண்டி ருந்தார். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அருகே உள்ள நாராயணபுரம் கூட்டுச்சாலை யில் வரும்போது சென்னை யிலிருந்து திருப்பதி நோக்கி எதிரே சென்ற கண்டெய்னர் லாரி திடீரென்று காரின் மீது மோதியது. இதில் சாய் சந்திர சேகர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் புஷ்கலா, கைலாஷ், தருண் கிருஷ்ணா ஆகிய 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை க்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை யில் புஷ்கலா, தருண் கிருஷ்ணா ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மகனை கொன்று தாய் தற்கொலை
போரூர், ஜூன் 22- சென்னை போரூரை அடுத்த தெல்லியார் அகரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (25). பெயிண்டர். இவரது மனைவி அஸ்வினி. இந்த தம்பதிக்கு பிரதீப் (4). சக்தி வேல் (2) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். பிரதீப்பிற்கு பிறவிலேயே காது கேட்கும் திறன் இல்லை. வாய் பேசவும் முடியாது. இதனால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, பேச்சு பயிற்சி கொடு க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சக்திவேலை பரிசோதித்த மருத்துவர்கள், அவனுக்கும் காது கேட்காத குறை இருப்பதாக தெரி வித்தனர். ஏற்கனவே ரூ.3 லட்சம்வரை செலவு செய்து மூத்த மகனுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் இளைய மகனுக்கும் அதே பிரச்சினை ஏற்பட்டதால் அஸ்வினி மனவேதனை அடைந்தார் மகன் சக்திவேலை தலைய ணையால் அழுத்தி கொன்று அவரும் தூக்கில் தொங்கிய தாக கூறப்படுகிறது.