திருவள்ளூர், ஆக. 19 - கார்ப்பரேட்களின் அதிதீவிர லாப நோக் கத்தை மையமாக கொண்டு உருவாக்கி யுள்ள தேசிய மீன்வளக் கொள்கை 2020ஐ மத்திய அரசு கைவிட வலியுறுத்தி புதனன்று (ஆக.19) பழவேற்காட்டில் மீனவர் கூட்ட மைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உள்நாட்டு நீராதாரங்களை, விவ சாயத்தை, சுற்றுச் சூழலை நாசமாக்கும் வெளி நாட்டு பெருமுதலாளிகளை கடலுக்குள் அனு மதிக்க கூடாது, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் (சிஆர்இசட் 2019) அறிக்கையை திரும்ப பெற வேண்டும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை கைவிட வேண் டும், அரசு அறிவித்தபடி மாதம் 300 லிட்டர் மண்ணெண்ணெய், டீசல் வழங்குவதை உறுதி படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட மீன்பிடி தொழிலா ளர் சங்கம், தொழிலாளர் நலச் சங்கம், மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கம், மீனவர் மேலாண்மை திட்ட நிறுவனம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த போராட் டத்தை நடத்தின. திருவள்ளூர் மாவட்ட மீன்பிடி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.நித்தியானந்தம் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐ டியு மாநில துணை பொதுச் செயலாளர் வி. குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், மீன் பிடி சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.விநாயக மூர்த்தி, சிபிஎம் மீஞ்சூர் ஒன்றிய செயலா ளர் என்.ரமேஷ்குமார், பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.எத்திராஜ், சி.பி.ஆர்.டி ஒருங்கிணைப்பா ளர் ஹாஜா உள்ளிட்டோர் பேசினர்.