திருவள்ளூர், மார்ச் 23- கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளை அறிந்துகொள்ளும் வெப்பநிலை பரிசோதனை கருவி களை அனைத்து அரசு மருத்துமனை களில் பொருத்தவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கொரோனா வைரஸ் தொற்று குறித்து அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஒத்துழைப்பை கொடுத்து விழிப்பு ணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கிறது. கட்சி அதன் அமைப்புகள் உள்ள இடங்களில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவ டிக்கைகளில் தனித்தும், உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்தும் செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மி டிப்பூண்டி, (மாதர்பாக்கம், ஆரம்பாக்கம்) ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி ஆகிய 5 தாலுகாக்கள் ஆந்திரா மாநில எல்லையோரம் உள்ளது. இந்தப் பகுதியில் கண்கா ணிப்பு நடவடிக்கையில் கூடுதல் கவ னம் செலுத்திட வேண்டும். கும்மிடிபூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை வட்டங்களில் தொழிற்சாலை, குடோன், செங்கல் உற்பத்தி உள்ளிட்ட பணிகளில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகமாக பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக மீஞ்சூர் பகுதியில் உள்ள வடசென்னை அனல்மின்நிலையம், வள்ளூர் அனல் மின்நிலையம் காமராஜ் துறைமுகம் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் வசிக்கும் இடம் மோசமான சுகா தார வசதியின்றி குவியலாக வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் அதிக விழிப்பு ணர்வும், சுகாதார வசதியும், நோய் தொற்று குறித்த பரிசோதனையும் கூடுதலாக செய்திட வேண்டும்.அதே போல் பழங்குடி மக்கள் வாழும் பகுதி யிலும் நோய் தொற்று குறித்து முகாம் நடத்தி விழிப்புணர்வு பரிசோதனை செய்திட வேண்டும். மாவட்ட தலை நகர் திருவள்ளூர் மருத்துவமனை யிலும், தாலுக்கா தலைமை மருத்துவமனையிலும், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மக்கள் தானாக முன் வந்து உடலின் வெப்ப நிலை பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் சிறப்பு பரி சோதனை பிரிவு மையம் ஏற்படுத்தி யும், பள்ளி மாணவர்கள் தேர்வு மையங்களிலும், பொதுமக்கள் வந்து செல்லும் ரயில், பேருந்து நிலையம் போன்ற பகுதிகளிலும் வெப்பநிலை அறிந்து கொள்ளும் பரிசோதனை செய்திட வேண்டும்.
மாவட்டம் முழுவ தும் முக கவசம் பற்றாக்குறை ஏற்பட்டும், கூடுதல் விலைக்கு விற்ப தும் போன்ற நிலையுள்ளது. கூடுதல் விலைக்கு விற்பதை தடுத்தும், அம்மா மருந்தகம், கூட்டுறவு மருந்த கம் உள்ளிட்ட அனைத்து மருந்து நிலையங்களிலும் முக கவசம் கூடுத லாக கிடைக்கும் வகையில் நடவ டிக்கை எடுத்திட வேண்டுகிறோம். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஆட்டோ தொழிலாளி, சுமை தூக்கும் தொழி லாளி, சாலையோர சிறுகடை வியா பாரி உள்ளிட்ட முறைசாரா தொழி லாளர்கள் வேலையிழந்துள்ளனர். கிராம பகுதியிலும் நூறு நாள் வேலை யும் சில இடங்களில் நடைபெறாமல் உள்ளது. இதனால் சாதாரண ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பொருளாதார ரீதியில் பாதிப்ப டைந்துள்ள மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கூடுதலாக வழங்கிடவும், அரசு நிவாரணம் உதவி வழங்கிட வும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். இந்த மனுவை வாங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரி கள் யாரும் இல்லாத காரணத்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கோபால் ஆட்சியரின் மின் அஞ்சல் முகவ ரிக்கு இந்த மனுவை அனுப்பினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. செல்வராஜ், வட்டச் செயலாளர் ஆர். தமிழரசன் ஆகியோர் உடன்சென்றி ருந்தனர்.