tamilnadu

img

பழவேற்காடு மீனவர் பகுதியை அதானிக்கு தாரைவார்க்காதே மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

திருவள்ளூர், செப். 30-  பழவேற்காடு மீனவர் பகுதியையும், கடல் வளத்தையும் அதானிக்கு தாரைவார்க்காதே என திருவள்ளூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு பழவேற்காட்டில் ஞாயிறன்று (செப்.29) நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஜி.விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். செய லாளர் டி.நித்தியானந்தம் வேலை அறிக்கையை முன்வைத்தார். மீனவர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகி ஆர்.லோ கநாதன் துவக்கவுரையாற்றி னார். சிஐடியு நிர்வாகிகள் என்.ரமேஷ்குமார், நரேஷ்குமார், பி.கதிர்வேல், பூபாலன், சிகாமணி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். சிஐடியூ மாநில துணைத் தலைவர் கே.விஜயன் நிறைவுரையாற்றினார்.
தீர்மானங்கள் 
பழவேற்காடு மீனவர் பகுதியை அதானிக்கு வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை கைவிட வேண்டும், முகத்துவாரம் தூர்வார வேண்டும், பழ வேற்காட்டில் உள்ளூர் மீனவர்களும் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி படுத்த வேண்டும், பூண்டி ஏரியில் உள்ளூர் மீனவர்களும் மீன்பிடிக்க அங்கீகாரம் வழங்குக, பழவேற்காடு பகுதியில் உள்ள அனைத்து மீனவர் குடும்பங்களில் வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்த பணி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக ஜி.விநாயகமூர்த்தி,  செயலாளராக டி.நித்தியானந்தம், பொருளாளராக என்.சிகாமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.