tamilnadu

img

செண்பகத்தோப்பு அணையில் சீரமைப்பு பணி

திருவண்ணாமலை,பிப்.23- திருவண்ணாமலை மாவட்டத் தில் செண்பகத்தோப்பு அணை சீரமைக்கும் பணி தற்போது நடை பெற்று வருகிறது. ரூ.16.37 கோடி மதிப்பீட்டில் புதிய ரேடியல் ஷட்டர் பொருத்தும் பணிகளை சனிக்கிழமை யன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்  ஆய்வு செய்தார்.  திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை கிழக்கு சரிவில் உற்பத்தியாகும் கமண்டல நதி, செண்பகத்தோப்பு மற்றும் சந்த வாசல் கிராமம் வழியாக நாகநதி யில் இணைந்து, கமண்டல நாகநதி யாக ஓடுகிறது. பின் செய்யாறு வழியாக பாலாற்றில் சேர்ந்து, வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. கமண்டல நாக நதியின் மூலம் வீணாகும் நீரை சேமிக்க, கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், அலியாபாத், வெள்ளூர், காமக்கூர், சத்திய விஜயநகரம், மற்றும் கே.என்.அணைக்கட்டு என, சிறிய வகை, ஐந்து அணைக்கட்டுகள் கட்டப்பட்டன.  ஆனாலும் நீர் அதிகமாக வீணாகியதால், செண்பகத்தோப்பு கிராமத்தில், கடந்த, 2001 ஆம்  ஆண்டு, நபார்டு வங்கி உதவியுடன் துவங்கி, 34 கோடி ரூபாய் மதிப்பில் 2007 ஆம் ஆண்டில்  கட்டி முடிக்கப் பட்டது. இந்த அணையின் மொத்த உயரமான, 62 அடி உயரத்தில் நீரை தேக்கி வைக்கலாம். ஆனால், கட்டு மானத்தில் நடைபெற்ற பெருமளவு ஊழல், முறைகேடுகள், காரணமாக, அணையின் பிரதான 7 கதவுகள், முதல்முறை நீர்தேக்கத்தின் போதே, உடைந்து போனது. இதனால், கடந்த 12 ஆண்டுகளாக பயன்படாம லேயே இருந்தது.  செண்பகத் தோப்பு அணையை சீரமைத்து, நீராதாரத்தை பாது காக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், செண்பகத்தோப்பு நீர் தேக்க பயன்பெறுவோர் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள்  பல ஆண்டு களாக கோரிக்கை வைத்து காத்திருந்தனர்.   செண்பகத்தோப்பு நீர்த் தேக்க பயன்பெறுவோர் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கம் சார்பில், இந்த அணையை சீரமைக்க, 2016 ஆம் ஆண்டு முதல் பல்வேறு இயக்கங்களை நடத்தியுள்ளனர். இந்நிலையில்,  செண்பத்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள செண்ப கத்தோப்பு அணையில் ரூ.16.37 கோடி மதிப்பீட்டில் புதிய ரேடியல் ஷட்டர் பொருத்தும் பணிகளை சனிக்கிழமையன்று,   அமைச்சர்  சேவூர் எஸ். இராமச்சந்திரன்  பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர்   க. சு. கந்தசாமி பொதுப்பணித் துறை - நீர்வள ஆதாரத் துறை மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஏ.மகேந்திரன், விவசாய சங்கங்க ளின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது, அமைச்சர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:- செண்பகத்தோப்பு அணையின் ரேடியல் ஷட்டரை புதுப்பித்து முழு அளவு தண்ணீரை சேமிக்க விவசாய பெருமக்கள், முதல மைச்சருக்கு கோரிக்கை வைத்தனர். இதனடிப்படையில், அணையின் ரேடியல் ஷட்டரை புதியதாக பொருத்துவதற்கு ரூ.16.37 கோடி ஒதுக்கீடு செய்து  15.10.2019 அன்று ஆணை பிறப்பித்தார். தற்போது, ஷட்டர்கள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட்டு  அணையின் முழு அளவு (62.00 அடி  287.2 மி.க.அடி) தண்ணீர் தேக்கப்படும். இந்த அணையின் மூலம் போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு மற்றும் ஆற்காடு வட்டங்களில் உள்ள 48 ஏரிகளின் மொத்த ஆயக்கட்டுகள் 7497 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.  தற்போது செண்பகத்தோப்பு அணையில் பழுதாகி உள்ள 7 ரேடியல் ஷட்டர்களில், 3 ஷட்டர்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது, மீதமுள்ள ஷட்டர்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து ஷட்டர்களும் அகற்றப் பட்ட வுடன், புதிய ரேடியல் ஷட்டர்கள் பொருத்தும் பணிகள் நடைபெறும். செண்பகத்தோப்பு அணையின் கரை, வடிகால், சாலை, பணி யாளர் குடியிருப்பு, ஆய்வு மாளிகை, அணைக்கட்டுகள், பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க ரூ.17.64 கோடி மதிப்பீடு தயாரிக் கப்பட்டு அரசுக்கு சமர்பிக்கப்பட்டுள் ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று அரசின் நிர்வாக ஒப்புதல் பெற்று விரைவில் மேற்கண்ட பணிகள் செய்து முடிப்பதற்கான நடவடிக்கை கள் உடனடியாக எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.