தி.மலையில் தொற்று 465
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது.
யானை தாக்கி விவசாயி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சின்ன பூதக்கோட்டை கிராமத்தில் காணாமல் போன ஆட்டை தேடிச்சென்ற விவசாயி சென்னப்பா (55) என்பவரை காட்டுயானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
போலி மருத்துவர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் தயாளன் (48) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜன்னல் வழியாக நகை கொள்ளை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பைனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராமன் வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 சவரன் நகை கொள்ளை. இதுகுறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு: 90 பேருக்கு தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 பேருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1251ஆக உயர்ந்துள்ளது. தற்சமயம் மருத்துவமனைகளில் 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம்: 19 நபர்களுக்கு தொற்று
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 19 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 267 பேர் குணமடைந்துள்ளனர். 6 பேர் உயிரிழந்தனர். 183 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர்: 65 பேருக்கு தொற்று
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1090ஆக அதிகரித்துள் ளது. இவர்களில் 700 பேர் குணமடைந்துள்ளனர். 11 பேர் உயிரி
ழந்தனர். 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் ஒத்தி வைப்பு
சென்னை நகரில் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும், தகுதிச்சான்று, பர்மீட், ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கவும், கடன் தவணையை செலுத்தவும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூன் 4) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளதாலும், தகுதிச்சான்று, பர்மீட், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் செல்லுபடி கலத்தை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. எனவே, போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. அதேசமயம், நிவாரணம் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள்குறித்து கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் மட்டும் சென்ற மாவட்ட ஆட்சியரை சந்தித்துமனு கொடுப்பார்கள் என்று கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.