tamilnadu

img

கிராம மக்கள் கூடி நடத்திய மஞ்சுவிரட்டு

திருவண்ணாமலை, ஜன. 16- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்  அடுத்த  காரப்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு  விழா நடத்தப்பட்டது.  தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு  அப்பகுதி மக்கள் மஞ்சுவிரட்டு போட்டியை  நடத்தினர். சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள  நூற்றுக்கணக்கான  காளைகள் இதில் பங்கு  பெற்றன. இந்த மஞ்சுவிரட்டை காண, சுற்று வட்டாரத்தில் இருந்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர். அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் காவல்  துறையினர் முழு பாதுகாப்பில் ஈடுபட்ட னர். இந்த மஞ்சுவிரட்டு குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

;