திருவண்ணாமலை,டிச. 18- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியத்தில், 2 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள், 22 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 40 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 321 கிராம வார்டு உறுப்பின ருக்கான தேர்தல் வருகின்ற 30 ஆம் தேதி நடைபெறு கிறது. போளூர் ஒன்றியத்தில் 385 ஊராட்சி பதவிகளுக்கு, 1169 பேர் மனு தாக்கல் செய் துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய் அன்று நடைபெற்றது. இந்நிலையில், காங்கேய னூர் ஊராட்சி மன்றத் தலை வர் பதவிக்கு கோட்டீஸ்வரி அசோகன் என்பவரும், விளாங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ராஜேந்திரன் என்பவரும், காள சமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வள்ளியம்மாள் ஆகியோரை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யப்பட வில்லை. இதனால் மேற் கண்ட 3 பேரும் ஊராட்சி மன்றத் தலைவராக போட்டி யின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.