tamilnadu

img

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் வாக்கு சேகரிப்பு

அவிநாசி, மே 12-சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து ஞாயிறன்று அவிநாசி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். சூலூர் சட்டமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.பழனிச்சாமிக்கு ஆதரவாகஅவிநாசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உதயசூரியன் சின்னத்திற்கு சூலூர் ஒன்றியம் செம்மாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கோதபாளையம் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்தவாக்கு சேகரிப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு உறுப்பினர் பி.முத்துச்சாமி, அவிநாசி ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், சூலூர் ஒன்றிய கமிட்டி உறுப்பினர் நடராஜ், செம்மாண்டம் பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் முருகன், அவிநாசி ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் வேலுச்சாமி, பாலசுப்பிரமணியம், பழனிச்சாமி, புதுப்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகன், உடையாம்பாளையம் கிளைச்செயலாளர் கருப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;