உடுமலை, மே 7- கொரோனா நிவாரணம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். கொரோனா நிவாரணமாக மாற் றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயி ரம் வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைக்கான சங்கத்தின் மாவட்ட செய லாளர் ராஜேஸ் தலைமையில் உடு மலை வட்டாச்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற் றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் ரவிக் குமார், உடனடியாக போராட்டத்தை கைவிடவில்லை எனில் அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என்று மிரட்டும் வகையில் பேசியதால் அதி காரிகளுக்கும், போராட்டக்கா ரர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் போராட்டத்தி ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் திருப்பூர் மாவட் டத்தில் தெற்கு தாலுகா அலுவலகம், வடக்கு தாலுகா அலுவலகம், முதலா வது மண்டல அலுவலகம், இரண்டா வது மண்டல அலுவலகம், நெருப்பெ ரிச்சல் வரி வசூல் மையம், செட்டிபா ளையம் விஏஓ அலுவலகம் உள்ளிட்ட ஏழு இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் ரமேஷ் மற்றும் அ.ஷகிலா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இப்போ ராட்டத்தில் 70 பேர் பங்கேற்றனர். அதேபோல் வடக்கு தாலுகா அலுவ லகத்தில் தெற்கு மாநகரச் செயலா ளர் சஞ்சீவன் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவ தும் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.