tamilnadu

img

ரிதுஸ்ரீ பெற்றோருக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி. நேரில் ஆறுதல்

திருப்பூர், ஜூன் 6 -நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து உயிரிழந்த திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீயின் குடும்பத்தாருக்கு கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் ஆறுதல் தெரிவித்தார். வியாழனன்று மாலை வெள்ளி யங்காட்டில் உள்ள மாணவி ரிதுஸ்ரீயின் வீட்டிற்கு பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநகரச் செய லாளர் டி.ஜெயபால், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்றனர். அங்கு ரிதுஸ்ரீயின் தந்தை செல்வராஜ் உள்ளிட்டஉறவினர்களுக்கு பி.ஆர்.நடராஜன் ஆறுதல் தெரிவித்தார்.மாணவியின் உயிரிழப்பு வேதனைக்குரியது, இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் போராடி வருகிறோம் என்று பி.ஆர்.நடராஜன் கூறினார்.

;