tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் மக்களுக்கு பாதிப்பு பி.ஆர்.நடராஜன் எம்.பி. பேச்சு

திருப்பூர், செப். 19 – உள்ளாட்சித் தேர்தலை நடத் தாத நிலையில் மக்கள் குடி நீருக்கும், அடிப்படை பிரச்சனை களுக்கும் தீர்வு காண முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆனால் ஆளும் அதிமுக அமைச்சர்கள் ஆதாயத்துக்காக தேர்தலை நடத்தாமல் உள்ளனர் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கூறினார். பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் வியாழனன்று வாக்காளர்களைச் சந்தித்து நன்றி அறிவிப்புப் பய ணத்தை பி.ஆர்.நடராஜன் மேற் கொண்டார். அப்போது பல்வேறு பகுதிகளில் அளிக்கப்பட்ட வர வேற்புக்கு நன்றி தெரிவித்து அவர் பேசுகையில், செல்லும் பகுதிகளில் எல்லாம் மக்கள் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க மனு அளிக்கின் றனர். ஆனால் மூன்றாண்டு கால மாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் ஆளும் அதிமுக தள் ளிப்போட்டு வருகிறது. அதி காரிகளோ மக்களின் தேவை களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர்களின் பெயரைச் சொல்லி கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலை நடத் தினால் நாடாளுமன்றத் தேர் தலைப் போல் திமுக தலைமை யிலான அணி மாபெரும் வெற்றி பெறும் என்பதால்தான் ஆளும் கட்சி தேர்தலை நடத்த அச்சப் படுகிறது என்றார். முன்னதாக பல்லடம் ஒன்றி யத்தில் மகாலட்சுமி நகரில் தொடங்கி கவுண்டம்பாளையம், மாதேஸ்வரா நகர், கணபதி பாளையம், நொச்சிபாளையம், சென்னிமலைபாளையம், அருள் புரம், கரைப்புதூர், ஆறுமுத்தாம் பாளையம், அறிவொளி நகர், 63 வேலம்பாளையம், பூமலூர், பள்ளிபாளையம், கிடாத்துறை புதூர், நடுவேலம்பாளையம், இச்சிபட்டி, கோடங்கிபாளையம், காரணம்பேட்டை, லட்சுமி மில்ஸ், செம்மிபாளையம், காளிவேலம் பட்டி, மாணிக்காபுரம், ராசாக்க வுண்டம்பாளையம் உள்பட ஏறத்தாழ 70 கிராமங்களில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரி வித்தார். நாடாளுமன்றத் தேர் தல் முடிந்தவுடன் 50 நாட்களுக்கு மேல் நாடாளுமன்ற நடவடிக்கை களில் பங்கேற்க வேண்டியிருந்த தால் இந்த சுற்றுப் பயணத்துக்கு தாமதம் ஏற்பட்டதையும் சுட்டிக் காட்டிய பி.ஆர்.நடராஜன் சாதா ரண மக்கள், விவசாயிகள், சிறு, குறு தொழில் செய்வோர், வியா பாரிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் நலன்களுக்காக பாடுபடுவேன் என்று கூறினார். இந்த பயணத்தின்போது காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ப.கோபி, திமுக மாவட்ட அவைத் தலைவர் கே.என்.திருமூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ப.கு.சத்தியமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம், கொமதேக மாவட்டச் செயலாளர் சி.ராஜேந்திரன், திமுக ஒன்றியச் செயலாளர் சு. கிருஷ்ணமூர்த்தி, மதிமுக இளை ஞரணி செயலாளர் ஆர்.ஆர்.ரவி, காங்கிரஸ் புண்ணியமூர்த்தி, சிபிஐ ஒன்றியச் செயலாளர் சாகுல் அமீது உள்பட தோழமைக் கட்சிகளின் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.