அவினாசி, ஜூலை 20- அவினாசி பகுதிகளில் கிறிஸ் தவ மதப்பிரச்சாரம் செய்த இரு வரை இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தோர் தாக்கி, அதனை வீடி யோவாக பதிவு செய்து வலை தளங்களில் பரவ விட்ட சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவி நாசி பகுதியில் அண்மையில் கிறிஸ்துவ அமைப்பைச் சேர்ந்த இருவர் மதப்பிச்சாரம் மேற் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இந்துத்துவ அமைப் பைச் சேர்ந்த கும்பல் ஒன்று, மதப் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த இருவரையும் கடுமையாக தாக்கி யுள்ளனர். மேலும், இனிமேல் கிறிஸ்துவ மதப்பிரச்சாரம் செய் யமாட்டோம் என பைபிள் மற்றும் இயேசு கிறிஸ்து மீது சத்தியம் செய்யக்கோரி மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த அவர்கள் இருவரும் வேறு வழியின்றி அவர் கள் கூறியபடி சத்தியம் செய்துள்ள னர். இதன்பின்னரும் அவர்களை விடாத அந்த இந்துத்துவா கும் பலைச் சேர்ந்தோர், இனிமேல் கிறிஸ்துவ மதத்தை பரப்பும் செய லில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி யது வரும் என மிரட்டியதுடன், அவர்களின் பெற்றோர் மற்றும் மனைவியை இழிவுபடுத்தும் வகை யில் மிக ஆபாசமான வார்த்தை களில் பேசியுள்ளனர். மேலும், இச் சம்பவங்கள் அனைத்தையும் வீடி யோவாக பதிவு செய்துள்ள அந்த இந்துத்துவா கும்பலைச் சேர்ந் தோர், அதனை தங்களது மூகநூல் பக்கம் உள்ளிட்ட சமூக வலைதளங் களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அது பல்வேறு தரப்பி னர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு இத்தகைய வெறுப்பு பிரச்சாரங்கள் நாடு முழுவதும் பெருமளவு அதிகரித்து வருகிறது. அதிலும் வடமாநிலங் களில் இந்துத்துவ அமைப்பினர் பல்வேறு பெயர்களில் குண்டர் படைகளை அமைத்துக் கொண்டு மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களை பல்வேறு காரணங்களை கூறி அடித்தே கொல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அத்தகைய சம்பவங்கள் தென்மாநிலங்களில் அரங்கேறாமல் இருந்த நிலையில் தற்போது இப்பகுதிகளிலும் தலைதூக்க துவங்கியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் மாட்டு கறி சூப் குடித்தார் என்ற காரணத்திற்காக அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமி இளைஞர் ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த வெறிக்கும்பல் ஒன்று கடுமையாக தாக்கியுள்ளது. இச்சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள்ளாகவே இத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரு வது மக்கள் ஒற்றுமையை விரும்ப வர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, சம்மந் தப்பட்ட வெறிகும்பல் மீது அவிநாசி காவல்துறையினர் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்துள் ளது. இதுகுறித்து அவிநாசி காவல் துறையினர் தரப்பில் விசாரிக்கை யில், இச்சம்பவம் தொடர்பாக இது வரை யாரும் புகார் தெரிவிக்க வில்லை. அதேநேரம், சமூக வலை தளங்களில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்படுமா என்று கேட் டபோது? பாதிக்கப்பட்டவர்கள் வந்து புகார் தெரிவித்தால் மட்டுமே அதனடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். இதுகுறித்து அவிநாசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறு கையில், வடமாநிலங்களைப் போலவே தற்போது தமிழகத்திலும் இது போன்ற சம்பவங்கள் பரவ லாக திட்டமிட்டு நடத்த துவங்கி யுள்ளனர். அதுவும், பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இத் தகைய மதக்கலவரங்களை கட்ட விழ்த்துவிட முயற்சிக்கின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கூட அவிநாசியை அடுத்த அன்னூர் பகுதியில் இந்து முன்னணியினர் தேவாலயத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் கூட அரங்கேறியது. ஆகவே, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.