அவிநாசி, பிப். 22- தத்தனூர் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் சனியன்று நடைபெற்றது. அவிநாசி வட்டம், தத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட சுள்ளிப்பாளையத்தில் அரசு மருத்துவ முகாம் நடைபெற்றது. துலுக்கமுத்தூர் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற இம்முகாமை வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். முகாமில், கண் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, இருதய பரி சோதனை என பல்வேறு பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில் 5 பேர் மட்டும் உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சுகாதார ஆய்வாளர் பர மன், ஊராட்சி செயலர் மகாலிங்கம் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.